search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மின்சார உற்பத்தி நிலையம்"

    அரியானாவில் உள்ள அனல்மின் நிலையத்தில் இன்று ஏற்பட்ட வெடிவிபத்தில் சிக்கி 2 தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். #Haryana #blast #powerplant
    சண்டிகர் :

    அரியானா மாநிலம் கேடார் மாவட்டத்தில் உள்ள ராஜிவ்காந்தி அனல்மின் நிலையத்தில் பழுது ஏற்பட்டதால் யுனிட்-1 நேற்று மூடப்பட்டது. இதையடுத்து, தொழிலாளர்கள் கொதிகலன்களின் அடிப்பகுதியில் ஏற்பட்ட கசிவை சரி செய்துகொண்டிருந்தனர். அப்போது எதிர்பாராவிதமாக திடீர் வெடிவிபத்து ஏற்பட்டது.

    இந்த வெடிவிபத்தில் சிக்கி தொழிலாளர்கள் விக்ரம் மற்றும் அமிட் ஆகிய இருவரும் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், படுகாயம் அடைந்த 4 தொழிலாளர்கள் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

    இந்நிலையில், மின்சார உற்பத்தி நிலையம் ஒப்பந்ததாரர் மீது வழக்குப்பதிவு செய்து, வெடிவிபத்து குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். #Haryana #blast #powerplant
    ×